ஐரோப்பா

தலை முடிக்கு சாயம் பூசிய பிரித்தானிய பெண்மணி நேர்ந்த கதி..!

பிரித்தானிய பெண்மணி ஒருவர், தலைமுடிக்கு டை அடித்ததால், இரண்டு நாட்களுக்கு பார்க்கமுடியாத நிலைமைக்கு ஆளானார்.

எல்லோருக்கும் எல்லா டையும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால்தான் பல டை நிறுவனங்கள், தலைமுடிக்கு டை அடிக்கும் முன் அலர்ஜி அல்லது ஒவ்வாமை சோதனை செய்துகொள்ள வலியுறுத்துகின்றன. தற்போது, அனுபவப்பட்ட பிரித்தானிய பெண்மணி ஒருவரும் அதையேதான் கூறுகிறார்.

பிரித்தானியாவிலுள்ள Southampton என்னுமிடத்தைச் சேர்ந்த Saffron Veal என்னும் பெண், தலைமுடிக்கு சாயம் பூச முடிவு செய்துள்ளார்.அதன்படி, L’Oreal Paris Casting Creme Gloss hair dye என்னும் சாயத்தை தலைக்கு பூசிக்கொண்டுள்ளார் Saffron.

தலை முடிக்கு டை அடித்த பிரித்தானிய பெண்மணி: அடுத்து நடந்த பயங்கரம் | L Oreal Paris Casting Hair Creme Allergy Uk

தலைமுடிக்குச் சாயம் பூசிய சிறிது நேரத்தில், Saffronஇன் முகம் பலூன் போல ஊதிவிட்டது. முகம் வீங்கிப்போனதால், கண்களைத் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது அவருக்கு.விடயம் என்னவென்றால், வீக்கம் கழுத்து, மார்பு வரை பரவி, 10 நாட்களாக, தலைவலியாலும் அவதியுற்றிருக்கிறார் Saffron. அதன் பிறகுதான் வீக்கமும் குறைந்துள்ளது.

ஒருவேளை கண் பார்வை வராமலே போய்விடுமோ என்று கூட பயந்துபோனேன் என்று கூறும் Saffron, ஒவ்வாமை பரிசோதனை செய்யாமல், தயவு செய்து டை அடிக்காதீர்கள் என எச்சரித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content