இலங்கை செய்தி

ராஜாங்கனையே சத்தரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வணக்கத்திற்குரிய ராஜாங்கனையே சத்தரதன தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகாதமையே இதற்குக் காரணம் ஆகும்.

குறித்த உத்தரவை பிறப்பித்த நீதவான், சந்தேகநபரான தேரரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதனை குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார்.

இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content