பொழுதுபோக்கு

விஜய் சினிமாவை விட்டுப் போவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை… பிரபலம் பகீர்

2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். அது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த அதே நேரம், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தளபதி விஜய் வெளியிட்ட அறிவிப்பு திரையுலகில் அவரை பெரிய அளவில் ரசிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இடியாக அமைந்தது. ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் அவர் களமிறங்க உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கின்ற திரைப்படம் வெளியாகி உலக அளவில் சுமார் 455 கோடி ரூபாயை வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக அது மாறியது.

இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தன்னுடைய 69வது மற்றும் இறுதி திரைப்படத்திற்கான பணிகளை அவர் தொடங்கி இருக்கிறார். பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

See also  என்னடா இது மதுரகாரனுக்கு வந்த சோதன... மாகாபா மீது வழக்கு பதிவு

இந்த நிலையில் தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் நிச்சயம் திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். “விஜய் அரசியலுக்கு போனால் என்ன? விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். விஜய் இடத்துக்கு வரவும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். சினிமா எப்போதுமே ஒருவரை நம்பியே இருக்காது. ஒருவர் போனால் மற்றொருவர் அந்த இடத்திற்கு வந்து விடுவார். அதனால் விஜய் சினிமாவை விட்டு போனதும் அது ஒன்றும் பெரிய இழப்பாக எங்களுக்கு இருக்காது” என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content