இலங்கை செய்தி

ஈரானின் $60 மில்லியன் எண்ணெய் கடனை தேயிலை மூலம் தீர்த்த இலங்கை

2011 ஆம் ஆண்டு முதல் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.

தேயிலை ஏற்றுமதியை கடனைத் தீர்க்கும் முறையாக இலங்கை மற்றும் ஈரானிய அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட மூலோபாய உடன்படிக்கையை பின்பற்றி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம், 2011 முதல் விதிக்கப்பட்ட ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள், ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையின் சரிவு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சவால்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான கொடுப்பனவு நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக குவிந்துள்ளது.

இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு கணிசமான அளவு அதிகரிப்பதையும் தலைவர் எடுத்துரைத்தார், இது சமீபத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, கடனைத் தீர்ப்பதற்கு உதவுகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 4.98 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1.85 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கினார்.

இந்த உடன்படிக்கையானது இலங்கையின் நிதிச் சுமையைக் குறைப்பது மட்டுமன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content