ஐரோப்பா

ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்று வரலாற்றை மாற்றிய பாகிஸ்தான்

ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்று வரலாற்றை மாற்றிய பாகிஸ்தான் நாட்டவர் தொடர்பில் உலகின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத் நதீம் அனைவரையும் வியக்க வைத்தார்.

இதன்மூலம் முந்தைய ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்த அவர், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையையும் அர்ஷத் நதீம் பெற்றார்.

1984 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்களம் என என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது பாஸ்கிதான்.

கடைசியாக 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்சில்தான் பாகிஸ்தான் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்