இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் -பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,   அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்களை ஒன்றுத்திரட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் போராட்டத்தை நாங்களும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள்.

எரிபொருள், மின்சார விநியோகம் ஆகிய அத்தியாவசிய சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மக்களின் ஜனநாயக போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் கொள்ளையடித்தார்கள்.

பாரிய பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!