இலங்கை

இலங்கை சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

  • September 30, 2025
  • 0 Comments

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இவ்வாறு வழங்கப்படுகின்றது. அதற்கமைய, இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப் பத்திரத்தை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் டிரம்ப் விடுத்த காலக்கெடு நிறைவு – பதவி விகும் ஒரு இலட்சம் அரச ஊழியர்கள்

  • September 30, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் தானாக முன்வந்து பதவி விலகவுள்ளனர். தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய, அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், 3 இலட்சம் அரசு ஊழியர்கள், […]

வாழ்வியல்

இதயத்தை பாதுகாக்கும் சைக்கிள்!

  • September 30, 2025
  • 0 Comments

நமக்கு முந்தைய காலம் வரை மக்களிடையே ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்து வந்தது. ஆனால், தற்போது அது நாளுக்குநாள் குறைந்து ஆரோக்கியமான உணவும் இல்லை, உடல் உழைப்பும் இல்லை. இதுவே, விதவிதமான நோய்கள் பெருகக் காரணமாக அமைகிறது. இதன் காரணமாகவே, தற்போது மருத்துவர்கள், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் சைக்கிளிங் பயிற்சி குறித்து பார்ப்போம்: சைக்கிள் […]

இந்தியா

இந்தியாவில் இருந்து அதிக அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

  • September 30, 2025
  • 0 Comments

இந்தியாவிலிருந்து அதிக அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென இந்திய ஆய்வுத் தரவுகளை வெளியிடும் த இன்டியன் இன்டெக்ஸ் என்ற எக்ஸ் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிடம் இருந்து இலங்கை 95.8 சதவீத அரிசியை இறக்குமதி செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அதற்கமைய, இந்தியாவிடம் இருந்து ஈரான் 99.4 சதவீத அரிசியை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் […]

தமிழ்நாடு

விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விபரீதம் – பிரபல யூடியூபர் கைது

  • September 30, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கூறி யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரது யூடியூப் சேனலில், விஜய் கைது, மின்சார தடை சதி உள்ளிட்ட வதந்திகளை பரப்பியதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. பெலிக்ஸ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கப்படுகிறார். இதற்கு முன், இதே காரணத்திற்காக […]

ஆசியா

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 65 மாணவர்கள்

  • September 30, 2025
  • 0 Comments

கிழக்கு ஜாவாவின் சிடார்ஜோ நகரில் உள்ள இந்தோனேசிய நகரமான சிடார்ஜோவில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 12 மணி நேரமாக சிக்கியுள்ளதாகவும், மாணவர்களை மீட்க அவசரகால குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. கான்கிரீட் தளங்களுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஒக்ஸிஜன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தது ஒருவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இறந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வட அமெரிக்கா

ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்

  • September 30, 2025
  • 0 Comments

பாலஸ்தீனப் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட காசா அமைதித் திட்டத்தை ஆதரிப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்தார். இருப்பினும், ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து இப்போது கவலைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இத்தகைய பின்னணியில் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் தான் முன்வைத்த திட்டங்களை நிராகரித்தால் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க […]

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

  • September 30, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு போட்டி இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ளது. போட்டியின் தொடக்க விழா இந்தியாவின் குவாதி மைதானத்தில் நடைபெற உள்ளது, முதல் போட்டி இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையே நடைபெறும். முதல் சுற்றில், இலங்கை அணி 7 போட்டிகளில் பங்கேற்கும், அதில் 2 போட்டிகள் இந்தியாவிலும் 5 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் […]

இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிக ஆபத்தான போதைப்பொருள்

  • September 30, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட மருந்து மாதிரிகள் குறித்து அரசு பகுப்பாய்வாளர் நடத்திய சோதனைகளின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத் தெரிவித்தார். “மியாவ்” என்று அழைக்கப்படும் இந்த வகை போதைப்பொருள் இந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. குறித்த போதை […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காசா போர் நிறுத்தத் திட்டம்! ட்ரம்ப், நெதன்யாகு இணக்கம்

  • September 30, 2025
  • 0 Comments

காசா பகுதியிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒப்புக்கொண்டுள்ளனர். அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ​இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு விடுவித்தால் இஸ்ரேலில் […]

error: Content is protected !!