ஆசியா

மியன்மாரில் மிதான நிலநடுக்கம் பதிவு!

  • October 3, 2025
  • 0 Comments

மியன்மாரில் 3.6 ரிக்டர் அளிவில் இன்று (03.10) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. பூமியின் மேலோட்டத்திலிருந்து 60 கி.மீ ஆழத்தில் இந்த நிலடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த புதன்கிழமை 3.1 ரிக்டர் அளவில் மிதான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – சாரதி பலி!

  • October 3, 2025
  • 0 Comments

மொனராகல தனமல்வில-வெல்லவாய வீதியில் இன்று (03.10) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமாகியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலுதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]

இலங்கை

நெருக்கடிக்குப் பின் மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் – IMF வெளியிட்ட தகவல்

  • October 3, 2025
  • 0 Comments

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நெருக்கடிக்குப் பின்னராக வலுவான மீட்சியையும் மேம்பட்ட நிதி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் ஐந்தாவது மதிப்பாய்வை, சர்வதேச நாணய நிதியக் குழு தற்போது நடத்தி வருகிறது. முன்னதாக, 2025 ஜூலை முதலாம் திகதியன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, தமது நான்காவது மதிப்பாய்வை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ட்ரோன்களால் அச்சுறுத்தல் – முடங்கிய விமான சேவைகள்

  • October 3, 2025
  • 0 Comments

ஜெர்மனியின், மியூனிக் விமான நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டன. ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நேற்று 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 3,000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். உள்வரும் பதினைந்து விமானங்கள் ஸ்ரூட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 20 பிற விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. விமான நிலையம், விமான நிறுவனங்களுடன் இணைந்து, முனையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு போர்வைகள், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியது. […]

ஐரோப்பா

பிரான்ஸ் முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

  • October 3, 2025
  • 0 Comments

பிரான்ஸ் முழுவதிலும் உள்ள 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று (02.10) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உதவிக் குறைப்புகளைக் கண்டித்தும், பணக்காரர்கள் மீது அதிக வரிகள் விதிக்கக் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்றிருந்தனர். பிளேஸ் டி’இத்தாலியில் இருந்து பேரணிகள் ஆரம்பமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸில் எழுந்துள்ள அரசியல் குழப்பங்கள், மற்றும் வரவு செலவு மீது மக்கள் கொண்டுள்ள  விரக்தியின் அடிப்படையில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்று […]

விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க தடை

  • October 3, 2025
  • 0 Comments

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான ஐசிசி விதியில் வீராங்கனைகள் கட்டாயம் கைகுலுக்க வேண்டிய அவசியமில்லை என்று வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் […]

இலங்கை

இலங்கை – பாதுகாப்பு பிரச்சினையை எதிர்நோக்கும் மஹிந்த!

  • October 3, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய  லேண்ட் ரோவர் வாகனம் இன்று (03.10) அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனால் அவர் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி உரிமைகள் ரத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம்,  ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பிற சிறப்பு உரிமைகள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் அரசாங்க வாகனங்களை ஒப்படைக்கும் செயல்முறையும் நடந்து வருகிறது. இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத […]

உலகம்

நெதன்யாகு மீதான கோபம் – கொலம்பியாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய தூதர்களும் வெளியேற்றம்

  • October 3, 2025
  • 0 Comments

கொலம்பியாவில் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளையும் தனது நாட்டிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலிய தூதரக வட்டாரங்களுக்கமைய, நான்கு இராஜதந்திரிகள் கொலம்பியாவில் உள்ளனர். காசாவுக்குச் செல்லும் ஒரு உதவி கடற்படையை இஸ்ரேல் கைப்பற்றி, இரண்டு கொலம்பிய ஆர்வலர்களை தடுத்து வைத்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற இரண்டு கொலம்பிய பெண்கள் சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி பெட்ரோ […]

தமிழ்நாடு

கரூர் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்படும் விஜய்?

  • October 3, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் கரூர் பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஆணையம் பரிந்துரைத்தால் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து விஜய் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களின் பயன்படுத்தப்படாத ஆடைகளை நன்கொடையாக வழங்க திட்டம்

  • October 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களின் பயன்படுத்தப்படாத ஆடைகளை தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்க ஒரு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கமும் உபரும் இணைந்து அதைச் செயல்படுத்துகின்றன. அதன்படி, சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் அக்டோபர் 18 ஆம் திகதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச கூரியர் பிக்-அப்பை முன்பதிவு செய்யலாம். இது, வீட்டை விட்டு வெளியேறாமல் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு உயர்தர தேவையற்ற ஆடைகளை நன்கொடையாக வழங்கும் வசதியை […]

error: Content is protected !!