ஐரோப்பா

பிரான்ஸில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்- பற்றி எரிந்த வேன்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர்  இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]

உலகம்

குவாண்டம் இயக்கவியலில் பணியாற்றியதற்காக மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

  • October 7, 2025
  • 0 Comments

இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.

பொழுதுபோக்கு

மாஸ் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய அவதாரம்

  • October 7, 2025
  • 0 Comments

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு ஐதராபாத் நகரில் ஆர்.டி.சி எக்ஸ் ரோடில் எ.எம்.பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை திறக்க உள்ளார். மொத்தம் 7 அரங்கங்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இவர் சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‛ஏ.எம்.பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ்  திரையரங்கத்தை திறந்திருந்தார். தற்போது மற்றுமொரு மல்டிபிளக்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளார். மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டப் படம் […]

இலங்கை

கொழும்பில் இருந்து சென்னை சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

  • October 7, 2025
  • 0 Comments

கொழும்பிலிருந்து இன்று(07) சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறவை மோதியதை அடுத்து விமானம் திருப்பி விடப்பட்டது. விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் எனவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் உடனடியாக ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா […]

இலங்கை

தம்புள்ளையில் இரசாயணப் பொருளை உட்கொண்ட மாணவர்கள் – 07 பேர் வைத்தியசாலையில்!

  • October 7, 2025
  • 0 Comments

தம்புள்ளையில் உள்ள ஒரு பாடசாலையின் ஆய்வகத்தில் இரசாயனப் பொருளை உட்கொண்ட  07 குழந்தைகள் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள், இரண்டு பேர் சிறுமிகள் எனக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளில் பாடசாலையின் ஆய்வகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆய்வகத்தின் தரையில் சிதறிக்கிடந்த சிவப்பு நிறப் பொருள் மிளகாய்த் தூள் என்று குழந்தைகள் தவறாகக் கருதி அதை உட்கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குறித்த பொருள் […]

இலங்கை

இலங்கையில் இரண்டு நாட்களில் 8000 ரூபாவால் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • October 7, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமைக்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” ஒரு பவுண்டு தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, இது 283,000 ரூபாவாகக் காணப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை 306,000 ரூபாவாக இருந்த “24 காரட்” ஒரு […]

இந்தியா

தெலுங்கானாவில் பண்ணை வீட்டில் போதை விருந்து; 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் கைது

  • October 7, 2025
  • 0 Comments

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து(Rave party)  நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் போதையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மொத்தமாக வந்தவர்களில் 12 பேர் பெண்கள், அவர்களில் ஐந்து பேர் சிறுமிகள். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லண்டனில் இடம்பெறும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது – பிரித்தானிய பிரதமர்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று  நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். மான்செஸ்டர் (Manchester) தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த […]

தென் அமெரிக்கா

ஈகுவடாரில் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம்; 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

  • October 7, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது. அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி டேனியல் நோபோவா அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர். […]

தமிழ்நாடு

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதியான விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய த.வெ.க!

  • October 7, 2025
  • 0 Comments

கரூர் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளை முன்னெடுத்த நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழகத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதுடன், பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து சிசிரிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பல குறைகள் இருப்பதாக தமிழ் நாட்டு […]

error: Content is protected !!