இலங்கை

இலங்கை – வீட்டை விட்டு வெளியேறிய இரு சிறுவர்கள் மாயம்!

  • October 9, 2025
  • 0 Comments

கண்டி, தென்னகும்புர பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றை தினம் (08.10) அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாயார் இந்திரமணி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். தென்னகும்புரவில் மகாவலி ஆற்றின் பக்கம் இரண்டு சிறுவர்களும் செல்வதைக் கண்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் சிக்கலில் உள்ள தேசிய சுகாதார சேவை – ஆபத்தில் நோயாளிகள்!

  • October 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) மருந்துகளை பெற்றுக்கொள்ள 25 சதவீதம் அதிகளவில் செலவழிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது வரவு செலவு திட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்  எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவையின் உதவிகளை பெற காத்திருக்கும் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழ்நிலையை கையாள பிரித்தானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து […]

பொழுதுபோக்கு

ஹிஜாப் அணிந்து சென்று சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன்

  • October 9, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன் குறித்த செய்திகள் தான் தற்போது வைரலாகி வருகின்றது. இவர்கள் இருவரும் புகழ்பெற்ற ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு விளம்பரத்திற்காக செல்லும் போது ரன்வீர் சிங் ஷெர்வானி போன்ற ஒரு உடையிலும் தீபிகா படுகோன் உடல் முழுவதும் ஹிஜாப் போன்ற ஒரு உடையில் முகம் மட்டும் தெரிந்தபடி அணிருந்திருந்தார். இந்த உடையை அபயா என்றும் கூறப்படுகிறது. இது தற்போது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் […]

பொழுதுபோக்கு

பாபாஜி குகையில் தியானத்தில் மூழ்கினார் ரஜினிகாந்த்

  • October 9, 2025
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 4ஆம் திகதி முதல் இமயமலை பயணம் மேற்கொண்டார். முதலில் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கி பின்பு பத்ரிநாத் சென்றார். பத்ரிநாத் செல்லும் வழியில் சாலையோரம் அவர் சாப்பிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து தற்போது பாபாஜி குகைக்கு சென்றுள்ளார். அங்கு போகும் முன் அவருக்கு பாபாஜி சிலை பரிசாக வழங்கப்பட்டது. பின்பு குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக […]

உலகம்

‘அபோகாலிப்டிக் பேரழிவை’ எதிர்கொண்டதற்காக ஹங்கேரிய நாவலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

  • October 9, 2025
  • 0 Comments

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. […]

இலங்கை

இலங்கை – ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

  • October 9, 2025
  • 0 Comments

இலங்கையில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி  அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் இதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஓய்வூதியத் துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஓய்வு […]

ஆசியா

வடகொரியாவிற்கு பயணிக்கும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி உருவாகி 80 ஆண்டுகள் ஆகுகின்ற நிலையில், நாளைய தினம் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வருகை தருவார்கள் எனக் கூறப்படுகிறது. இதன்படி சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து உயர்மட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லாவோஸ் ஜனாதிபதி தோங்லவுன் சிசோலித்தும் (Thongloun Sisoulith) இதில் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த […]

ஐரோப்பா

போரில் F-16 போர் விமானங்களுக்கான தொடர்ச்சியான ஆதரவு குறித்து நெதர்லாந்து,உக்ரைன் இடையே விவாதம்

  • October 9, 2025
  • 0 Comments

உக்ரைனின் F-16 போர் விமானத் திட்டத்திற்கான வெடிமருந்துகள், உதிரி பாகங்கள் மற்றும் பயிற்சி உள்ளிட்ட ஆதரவை மதிப்பாய்வு செய்ய டச்சு பாதுகாப்பு அமைச்சர் ரூபன் பிரெக்கல்மன்ஸ் உக்ரைனிய துணை பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் கோசென்கோவை சந்தித்ததாக டச்சு பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (08) தெரிவித்துள்ளது. உக்ரைனிய விமானிகள் வான்வெளியைப் பாதுகாக்கவும், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அகற்றவும் F-16 விமானங்களைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது உண்மையிலேயே சுவாரஸ்யமாக உள்ளது என்று பிரெக்கல்மன்ஸ் அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான X இல் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயனர்களின் உரையாடல்களைப் பயன்படுத்தி பொருட்களை விற்க தயாராகும் மெட்டா நிறுவனம்

  • October 9, 2025
  • 0 Comments

மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) chatbotஇல் பயனர்களுடன் நடைபெறும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 16ஆம் திகதி முதல் இந்த நடைமுறை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் AI chatbot உடன் பயணம் மற்றும் வணிகம் போன்ற விடயங்களைப் பகிரும் போது, மெட்டா பயனாளர்களின் ஆர்வங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ற விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை வழங்கும். இத்தகைய புதிய அணுகுமுறையை மெட்டா தனது தற்போதைய விளம்பர இலக்கிடும் […]

இந்தியா

இந்தியாவில் திறக்கப்படும் பிரித்தானியாவின் கிளைப் பல்கலைக்கழகங்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் பிரித்தானிய பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதன்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள […]

error: Content is protected !!