இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

  • October 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமாதான உடன்படிக்கைக்கு இணங்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் திங்கள் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் வீடற்ற நிலையில் தவிக்கும் 65,000 பெண்கள்

  • October 10, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வீட்டு வன்முறை மற்றும் வீடற்ற தன்மை என்பது ஒவ்வொரு ஆண்டும் 65,000 க்கும் மேற்பட்ட பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் வீடற்ற தன்மைக்கு குடும்ப வன்முறை முக்கிய காரணமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 67,000 பெண்களைப் பாதிக்கிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. உலக வீடற்றோர் தினமான இன்று ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்ட தரவுகளுக்கமைய, நியூ சவுத் வேல்ஸில் வீடற்ற மக்கள் தொகை 1,500 க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. […]

இலங்கை

உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை – கடும் நெருக்கடியில் இலங்கை நகை வியாபாரிகள்

  • October 10, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையிலுள்ள நகை வியாபாரிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டொலரை தாண்டியுள்ளது. உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் […]

உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு – நம்பிக்கையை இழந்த ட்ரம்ப்

  • October 10, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையை இழந்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளன. இந்நிலையில், தங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுமா என ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், வேறு எந்தத் தலைவரும் செய்யாத அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அவர் […]

இலங்கை செய்தி

அமைச்சர் வசந்த குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட 10 பேஸ்புக் பயனர்கள் மீது CID விசாரணை

  • October 9, 2025
  • 0 Comments

அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோடி விக்ரமசிங்க ஆகியோரை குறிவைத்து சமூக ஊடகங்களில் பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் தொடர்பாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) புகார் அளித்துள்ளது. பல பேஸ்புக் பக்கங்கள் மற்றும் வலைத்தளங்கள் அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்களின் தனிப்பட்ட, குடும்பம் மற்றும் தொழில்முறை நற்பெயரையும், அவரது அரசியல் தன்மையையும் சேதப்படுத்தும் வகையில் ஜோடிக்கப்பட்ட கதைகள், திருத்தப்பட்ட […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைத்த மால்டா வெளியுறவு அமைச்சர்

  • October 9, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான மால்டாவின் வெளியுறவு அமைச்சர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் டிரம்பின் வெற்றி, மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது முயற்சிகளை குறிப்பிட்டு வெளியுறவு அமைச்சர் இயன் போர்க் (Ian Borg) பரிசை பரிந்துரை செய்துள்ளார் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் தலைவர்கள் ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது இரு நாடுகளுக்கும் […]

இலங்கை செய்தி

இலங்கை: கூட்டு அரசியல் பயணத்திற்காக ஒன்றினையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி

  • October 9, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவும் நிர்வாகக் குழுவும் ஒரு பொதுவான கொள்கை கட்டமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கான கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டையும் அதன் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறை, தீர்வுகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் […]

உலகம் செய்தி

காசா அமைதி திட்டத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி மற்றும் ஜெலென்ஸ்கி வாழ்த்து

  • October 9, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து இந்திய பிரதமர் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி, பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி Xல் ஒரு பதிவில், “ஜனாதிபதி டிரம்பின் காசா அமைதித் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எனது நண்பர் நெதன்யாகுவை வாழ்த்தினேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மேம்பட்ட மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், உலகில் எங்கும் […]

செய்தி விளையாட்டு

Womens WC – 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

  • October 9, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 10வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்கள் குவித்தது. இந்திய […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தியா வந்தடைந்த தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி

  • October 9, 2025
  • 0 Comments

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்ட தலிபான் அரசாங்கத்தின் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்தடைந்துள்ளார். ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், காபூலில் இருந்து புது தில்லிக்கு உயர்மட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தியாவிற்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள முத்தாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இது குறித்து பேசிய வெளியுறவு அமைச்சக […]

error: Content is protected !!