உலகம்

வெனிசுலாவிற்கு (Venezuela) போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா – மதுரோவின் (Maduro) ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சியா? 

  • October 24, 2025
  • 0 Comments

அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களின் மற்றொரு குழு, வெனிசுலா (Venezuela) நோக்கி புறப்பட்டுச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் கரீபியன் கடலிலும் வெனிசுலாவைச் சுற்றியுள்ள நீரிலும் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய படையை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையானது  வெனிசுலா (Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின்  (Nicolás Maduro) அரசாங்கத்தை வீழ்த்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க இராணுவம், வெனிசுலாவைச் (Venezuela) சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் போதைப்பொருள் இருந்த கப்பல் […]

இலங்கை

இலங்கையில் 16 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

  • October 24, 2025
  • 0 Comments

நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 361 குடும்பங்களைச் சேர்ந்த 21, 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 591 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. எட்டு […]

ஐரோப்பா

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

  • October 24, 2025
  • 0 Comments

அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்துள்ள தடைகள் குறித்துப் பேசிய புட்டின், சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அதன் மக்களும் நெருக்குதலுக்குப் அடிபணியமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவித்தார். இந்தத் தடைகள் ரஷ்யப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்காது. மாறாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளே பாதிப்படையும் என அவர் குறிப்பிட்டார். உலகச் சந்தையில் எண்ணெய் இருப்பு […]

இலங்கை

இலங்கையில் தென்படும் வால் நட்சத்திரம்!

  • October 24, 2025
  • 0 Comments

C/2025 A6’ எனப்படும் வால் நட்சத்திரத்தை இன்று மாலை வானில் தென்படும் என்று விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர அறிவித்தார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை 6.30 மணி முதல் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும் என்று அவர் கூறினார். மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்காவில் […]

இலங்கை

ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்கள் டெல்லி பயணம்!

  • October 24, 2025
  • 0 Comments

இலங்கையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய இரு அரசியல் பிரமுகர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கமைய துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக எதிர்வரும் 27 ஆம் திகதி டெல்லி செல்கின்றார். மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, […]

இலங்கை

போர்காலத்தைவிடவும் ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை – மஹிந்த கட்சி குற்றச்சாட்டு!

  • October 24, 2025
  • 0 Comments

போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டுமென துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் […]

ஐரோப்பா

தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து மருத்துவர்கள்!

  • October 24, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என பிரித்தானிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம்  14 ஆம் திகதி காலை 7 மணி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி காலை 7 மணி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவர்கள் என அறியப்படும் மருந்துவர்கள் நிரந்த பணிநியமனம் கோரி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அத்துடன் சம்பள […]

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் கோர விபத்து – 20 பேர் பலி – பலர் படுகாயம்

  • October 24, 2025
  • 0 Comments

இந்தியாவில் இன்று காலையில் ஏற்பட்ட தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர் கிராமத்தில், இன்று அதிகாலையில் ஐதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது. தனியார் பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்துடன் மோதியதால், பெட்ரோல் தாங்கி வெடித்த நிலையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக 42 பயணிகள் பயணித்த பேருந்தில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், […]

கருத்து & பகுப்பாய்வு

மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர்பாக்டீரியாக்கள் – ஆண்டுக்கு 50 லட்சம் உயிர்கள் ஆபத்தில்

  • October 24, 2025
  • 0 Comments

மனிதகுலத்தின் மிகப்பெரிய மருத்துவக் கண்டுபிடிப்பான ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகள் தங்கள் சக்தியை இழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத ‘சூப்பர்பாக்டீரியாக்கள்’ (Superbactéries) பரவல், உலகை ஒரு கொடிய ஆபத்தின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது. இதனால், சாதாரண காயங்கள் மற்றும் பொதுவான தொற்றுகள்கூட மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 6 பாக்டீரியா தொற்றுகளில் 1 தொற்று, […]

இலங்கை

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கைப்பற்றல்

  • October 24, 2025
  • 0 Comments

இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு, கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்தப் படகு, யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் நான்கு […]

error: Content is protected !!