இலங்கையில்சீரற்ற காலநிலை -கடற்படையினரின் உதவியுடன் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்
களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் மழையினால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரீட்சைக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிரமங்களை எதிர்கொண்ட கல்வி பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களை கடற்படையினர் படகுகள் மூலம் ஏற்றிச்சென்று பரீட்சைக்கு தோற்ற உதவினர். களுத்துறை மாவட்டம், பதுரலிய லத்பந்துர பகுதியில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொண்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர […]













