உலகம்

நைஜீரியாவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் ஆயுத தாரிகளால் ஏறக்குறைய 215 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அக்வாராவில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியில் இருந்து நேற்று குறித்த பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் 52 மாணவர்கள் கடத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சரியான எண்ணிக்கை மதிப்பிடப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 215 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. “காவல்துறை தந்திரோபாயப் பிரிவுகள், இராணுவக் குழுக்கள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, […]

அரசியல் இலங்கை

தற்போதைய நிலையி்ல் நாமலே எதிர்க்கட்சி தலைவர் – மனோ கணேசன்

  • November 22, 2025
  • 0 Comments

“எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் எதிர்க்கட்சி தலைவர்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு, ” நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம். […]

அரசியல் ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் தென்னாபிரிக்காவில் சந்திப்பு!

  • November 22, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸி ஆகியோர் அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்தே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பற்றி கலந்துரையாப்பட்டது. இந்தோ – பசுபிக் பாதுகாப்பு உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டுள்ளன. “ ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ{டன் மிகச் […]

ஐரோப்பா செய்தி

லண்டன் யூஸ்டனில் (London Euston) இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் இரத்து!

  • November 22, 2025
  • 0 Comments

லண்டன் யூஸ்டனில் (London Euston) இருந்து  வடக்கு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவந்தி வெஸ்ட் கோஸ்ட் பாதையில் (Avanti West Coast route)  உள்ள சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மென்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வடக்கு வேல்ஸுக்குச் (north Wales)  செல்லும் மற்றும் திரும்பி வரும் ரயில் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த […]

அரசியல் இலங்கை

என்பிபி அரசு மஹிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

  • November 22, 2025
  • 0 Comments

ராஜபக்சக்களுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலன சென்று மஹிந்த ராஜபக்சவிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் உள்ளது. ராஜபக்சக்களின் மகன்மார் வளர்க்கும் நாய்க்கு தங்க சங்கிலி போடப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலனயில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் […]

அரசியல் இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்! 

  • November 22, 2025
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டனர் என்று […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் 28 அம்ச கோரிக்கை – உக்ரைனுக்கு உள்ள சவால்!

  • November 22, 2025
  • 0 Comments

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டம் உக்ரைனுக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்காவை பகைத்துக்கொள்ளாமல் உக்ரைன் காய் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் உக்ரைனின் தலையீடு இன்றி  சுயாதீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய நிலப்பரப்புகளை ரஷ்யாவின் வசம் விட்டுக்கொடுப்பதும் அடங்குகின்றது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பல முறை நிராகரித்த திட்டங்கள் இந்த 28 அம்ச கோரிக்கைகளில […]

ஐரோப்பா

“ஒரு கைதியின் நாட்குறிப்பு” – நூல் வெளியீட்டிற்கு தயாராகும் பிரான்சின் முன்னாள் அதிபர்!

  • November 22, 2025
  • 0 Comments

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி (Nicolas Sarkozy) தான் சிறையில் அனுபவித்த துன்பங்கள், அல்லது சிறையில் இருந்த நாட்களை விளக்கும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதவுள்ளார். குறித்த புத்தகத்திற்கு “ஒரு கைதியின் நாட்குறிப்பு” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையான அவர், சத்தம், துரதிர்ஷ்டவசமாக, நிலையானது” என்றும் “சிறையில் மனிதனின் உள் வாழ்க்கை வலுவடைகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை […]

இலங்கை

கண்டி – கடுகண்ணாவ நிலச்சரிவு : பலி எண்ணிக்கை நான்காக உயர்வு!

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி – கடுகண்ணாவ ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மீட்புக் குழுவினர் மேலும் இருவரின் உடல்களை மீட்டதை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக  DMC தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

உலகம் செய்தி

ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த இந்திய பிரதமர்

  • November 21, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில்(South Africa) வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோர்(tech entrepreneurs) மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தொழில்நுட்ப தொழில்முனைவோரை இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை ஆழப்படுத்துமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) உள்ள மோடி, ஒரு சமூக ஊடகப் பதிவில், இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் தனக்கு பயனுள்ள தொடர்பு இருந்ததாகவும், நிதி தொழில்நுட்பம், சமூக ஊடக […]

error: Content is protected !!