உலகம் முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்டத்தில் மாற்றம் – கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

கனடா தனது குடியுரிமை விதிகளை நவீனமயமாக்க உள்ளது. இது ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பிற கனேடியர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லேஜ் டயப் ( Lena Metlege Diab) கூறுகையில், நமது குடியுரிமைச் சட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் சிக்கல்களைச் சரிசெய்து, வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு நியாயத்தை கொண்டுவரும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது முந்தைய சட்டங்களால் குடியுரிமையை […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசன் – குஷ்பு – சுஹாசினி திடீர் சந்திப்பு

  • November 23, 2025
  • 0 Comments

நடிகர் ரஜினியின் “தலைவர் 173” படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை சுந்தர் சி இயக்க போவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு திடீரென அப்படத்திலிருந்து சுந்தர் சி விலகினார். இதையடுத்து புதிய இயக்குனர் யார் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், சுந்தர் சியின் திடீர் விலகலுக்கு காரணம் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், கமல்ஹாசனும், குஷ்பூவும் கோவாவில் சந்தித்துக்கொண்டார்கள். இவர்களுடன் சுஹாசினியும் உடனிருந்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள். அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட […]

பொழுதுபோக்கு

‘மாஸ்க்’ இயக்குனர் விகர்னன் அசோக் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

  • November 23, 2025
  • 0 Comments

அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ‘மாஸ்க்’. நடிகை ஆண்ட்ரியா மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பணம் கொள்ளை போனதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாக்ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் குறித்த படத்தின் இயக்குனர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இதில், பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதித்த ஒரு நிஜ […]

உலகம்

ஜப்பான் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்கிறது – சீனா எச்சரிக்கை!

  • November 23, 2025
  • 0 Comments

தைவான் தொடர்பான ஜப்பானின் ஜனாதிபதி கூறிய கருத்துக்களை விமர்சித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ஜப்பான் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்வதாகவும், அதைத் தொடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi)  தைவான் விவகாரத்தில் இராணுவ ரீதியாகத் தலையிட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “சீனா தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும்,  இரத்தம் மற்றும் தியாகத்தால் பெறப்பட்ட சாதனைகளைப் […]

உலகம்

சைபர் குற்றங்கள் – மியன்மாரில் ஏறக்குறைய 1600 பேர் கைது!

  • November 23, 2025
  • 0 Comments

தாய்லாந்து எல்லையில் உள்ள இணைய மோசடிமையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1600 வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்துள்ளதாக மியன்மார் இராணுவம் இன்று அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரின் எல்லைப் பகுதிகளில் மோசடி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.   மோசடி கும்பல்கள் இணையம் மூலம் பல குற்றங்களை செய்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 18 முதல் 22 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 1,590 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று மட்டும் 223 பேர் கைது […]

ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் – 90 பேர் கைது!

  • November 23, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று மத்திய லண்டனில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  குறைந்தது 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. போராட்டத்தின்போது இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” மற்றும் “பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் முதியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்!

  • November 23, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் (Augsburg – Buchloe – Füssen line) இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்க்கில் (Augsburg)  இருந்து புறப்பட்ட ரயில், வேறொரு பாதைக்கு மாற்றப்படும்போது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருவதாகவும் […]

இலங்கை

பரீட்சைக்கு முன்பே கசிந்த வினாத்தாள் – CIDயிடம் முறைப்பாடு!

  • November 23, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறும் அறிக்கைகளை விசாரிக்க, பரீட்சைகள் திணைக்களம்  குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் துணைத் தேர்வு ஆணையரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய நாட்களில், உயர்தரப் பொருளாதார வினாத்தாள் கசிந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும்,  உள்ளக விசாரணையில், அத்தகைய சம்பவம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று திணைக்களம் […]

உலகம்

வியட்நாமில் பேரழிவு : 12 பேர் மாயம்!! 270 மில்லியன் வரை இழப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

தெற்கு மற்றும் மத்திய வியட்நாமில் பெய்த கனமழை மற்றும் பரவலான வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 235,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அதேநேரம் 80,000 ஹெக்டேயர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் £270 மில்லியன் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டக்லக் (Dak Lak) மாநிலம் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு சுமார் 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இராணுவம் […]

உலகம்

டைட்டானிக் விபத்துக்கு பிறகு மீட்கப்பட்ட கடிகாரம் – அதிக விலைக்கு விற்பனை!

  • November 23, 2025
  • 0 Comments

டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான  கடிகாரம் ஒன்று 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் இந்த கடிகாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டைட்டானிக் விபத்திற்கு பிறகு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறன. அந்தவகையில் குறித்த கடிகாரமே அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருளாகும். ஏப்ரல் 14, 1912 அன்று, நியூயார்க்கிற்குப் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையொன்றுடன் […]

error: Content is protected !!