இலங்கை செய்தி

சுவிஸ் மற்றும் கனடாவில் வேலைவாய்ப்பு – இருவர் அதிரடியாக கைது!

  • November 24, 2025
  • 0 Comments

கனடா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதன்படி முதலாவதாக வராக்காபொலவில் ஓய்வுபெற்ற தோட்ட மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடாவில் பண்ணைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் இருந்து 52 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தலா 13 மில்லியன் ரூபாயை பெற்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், […]

செய்தி விளையாட்டு

ஜப்பானில் சுமோ சாம்பியனான உக்ரேனிய அகதி

  • November 23, 2025
  • 0 Comments

ஒரு உக்ரேனிய அகதி, தனது நாட்டிலிருந்து ஜப்பான் வந்து பிரபல சுமோ(sumo) போட்டியை வென்ற முதல் நபராக மாறியுள்ளார். அயோனிஷிகி(Aonishiki) என்ற சுமோ பெயரால் அறியப்படும் டேனிலோ யாவ்ஹுசிஷின்(Danylo Yavhusishyn), தனது நாட்டின் மீது ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு 2022ம் ஆண்டு 18 வயதில் ஜப்பான் வந்தடைந்துள்ளார். இப்போது 21 வயதாகும் அவர், மதிப்புமிக்க பேரரசர் கோப்பையை வென்ற முதல் உக்ரேனியரும், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இந்த கோப்பை வென்ற முதல் ஐரோப்பியரும் ஆவார். இந்நிலையில், வெற்றிக்கு […]

இலங்கை செய்தி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மலேசிய நாட்டவர்

  • November 23, 2025
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் மலேசிய(Malaysian) நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 250 மில்லியன் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய மலேசிய நாட்டவர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அபுதாபியிலிருந்து(Abu Dhabi) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சாக்லேட் என பெயரிடப்பட்ட பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் இளம் கால்பந்து வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  • November 23, 2025
  • 0 Comments

மகாராஷ்டிராவின்(Maharashtra) பால்கர் பகுதியில்(Palghar)உள்ள ஒரு மரத்தில் மும்பையைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புனேவில்(Pune) கால்பந்து விளையாடப் போவதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த சாகர் சோர்டி(Sagar Sorti) கடந்த15ம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள், அவரது குடும்பத்தினரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 18ம் திகதி, ஒரு மரத்தில் கயிற்றால் தொங்கிய நிலையில் அவரது உடல் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாகர் சோர்டியின் […]

உலகம் செய்தி

உளவு குற்றச்சாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி நீதிமன்றம்

  • November 23, 2025
  • 0 Comments

ஏமன்(Yemen) தலைநகரில் உள்ள ஹவுதி(Houthi) கட்டுப்பாட்டு நீதிமன்றம், வெளிநாட்டு அரசாங்கங்களுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தலைநகர் சனாவில்(Sanaa) உள்ள சிறப்பு குற்றவியல் நீதிமன்றம், தண்டனை பெற்றவர்கள் அமெரிக்கா(America), இஸ்ரேல்(Israeli) மற்றும் சவுதி(Saudi) உளவுத்துறையுடன் இணைக்கப்பட்ட ஒரு உளவு வலையமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது. 17 பேருக்கும் “தடுப்பு நடவடிக்கையாக பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலின் மொசாட்(Mossad) உறுப்பினர்கள் உட்பட வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகளுக்கு […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் மீட்பு – கிறிஸ்தவக் குழு

  • November 23, 2025
  • 0 Comments

நைஜீரியாவில்(Nigeria) உள்ள ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்களில் குறைந்தது 50 பேர் சிறைப்பிடிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பித்ததாக சம்பவத்தைக் கண்காணிக்கும் ஒரு கிறிஸ்தவக் குழு தெரிவித்துள்ளது. வட-மத்திய நைஜீரியாவின் நைஜர்(Niger) மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரி(St. Mary) கத்தோலிக்கப் பாடசாலையை துப்பாக்கிதாரிகள் தாக்கி, 303 குழந்தைகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்தி சென்றனர். நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கம்(CAN) 50 மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தற்போது அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. “அதிக ஆபத்துடன் […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்த 60 வயது பெண் கொலை

  • November 23, 2025
  • 0 Comments

திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்த 60 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்(Hathras) மாவட்டத்தின் சந்த்பா(Chandpa) பகுதியில் உள்ள நாக்லா பூஸ் டிரிசெக்ஷனில்(Nagla Bhoose trisection) சாலையோரம் அருகே அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர விசாரணைகளுக்கு பிறகு அந்தப் பெண் 60 வயது ஜோஷினா(Joshina) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்சில்(Tajganj) வசிக்கும் சந்தேக […]

கருத்து & பகுப்பாய்வு

காவியை கண்டு அஞ்சும் சிவப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

இலங்கையை பொறுத்தவரையில் ‘சிவுர’ எ்னற காவி உடையை அணிபவர்கள், பௌத்த மதம் சார்ந்த விடயங்கள் மற்றும் புத்தர் சிலை ஆகியவற்றுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து நான் சொல்லி, இந்த கட்டுரையை வாசிக்கும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்காது என நம்புகின்றேன். இலங்கையை ஒரு பௌத்த நாடாகவே சிங்கள பெரும்பான்மை மக்கள் பார்க்கின்றனரை். ஏன், சில செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் அனைவருமே அப்படித்தான் கருதுகின்றனர். அவர்கள் இந்த விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வந்துள்ளனர். இந்த விடயங்களை மெய்ப்பிக்கும் […]

உலகம் செய்தி

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் மரணம்

  • November 23, 2025
  • 0 Comments

நான்கு மாதங்களுக்கு பிறகு பெய்ரூட்டில்(Beirut) உள்ள ஹெஸ்பொல்லாவின்(Hezbollah) தலைமைத் தளபதியை குறிவைத்து இஸ்ரேல்(Israel) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் 28 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹரேத் ஹ்ரீக்(Haret Hreik) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது, இது ஹெஸ்பொல்லாவின் ஆதிக்கம் செலுத்தும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். தாக்குதலில் ஒரு மூத்த தளபதி குறிவைக்கப்பட்டதை […]

செய்தி விளையாட்டு

முத்தரப்பு T20 தொடர் – 195 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் அணி

  • November 23, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்தவகையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் சாஹிப்சடா பர்ஹான்(Sahibzada Farhan) 63 ஓட்டங்களும் […]

error: Content is protected !!