இந்தியா

பீகாரில் கங்கை ஆற்றின் நடுவே நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது!

  • June 4, 2023
  • 0 Comments

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில்,  கங்கை ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகின்ற பாலம் இடிந்து விழுந்துள்ளது. கங்கை ஆற்றை கடக்கும் வகையில் பீகார் மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் பாலம் இரண்டாவது முறையாக உடைந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகல்பூரில் Aguwani-Sultanganj பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ […]

இந்தியா செய்தி

லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுதலை!

  • June 4, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது. கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள்  பணியாற்றினர். குறித்த கப்பல் லிபியாவின் கடற்கரைக்கு அருகே வந்தபோது நடுகடலில் பழுதடைந்தது.  இதன்போது கப்பலில் இருந்தவர்களை லிபியா உள்ளூர் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர். கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகளை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது குறித்த மாலுமிகள் விடுவிக்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். […]

ஆப்பிரிக்கா

கப்பல் டேங்கர் வெடிப்பு : சிறிது நேரம் தடைப்பட்ட சூயஸ் கால்வாயின் போக்குவரத்து!‘

  • June 4, 2023
  • 0 Comments

எகிப்தின் சூயஸ் கால்வாயின் ஒற்றைப் பாதையில் கச்சா எண்ணெயுடன் பயணித்த கப்பலின் டேங்கர் வெடித்ததில் போக்குவரத்து தடை பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால்வாயின் 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தூரத்தில் மால்டா கொடியுடன் கூடிய சீவிகோர் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக  சூயஸ் கால்வாய் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் சஃப்வத் தெரிவித்தார். இதன்காரணமாக கால்வாயூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன், அதன் பின்னால் வந்த 8 கப்பல்களின் பயணமும் தடைபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, […]

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் கோளாறுகளை சீர் செய்யாதது ஏன்?

  • June 4, 2023
  • 0 Comments

ஒடிசா ரயில் விபத்தில் பலர் பலியாகியுள்ள நிலையில், இதற்கு பின்னணியில்  தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக  தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்  ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார். முன்னதாக பிப்ரவரி 8ம் திகதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில் […]

ஆப்பிரிக்கா

சோமாலியாவில் பாதுகாப்பு படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!

  • June 4, 2023
  • 0 Comments

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பு தளத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் அரசுக்கு […]

ஆசியா

ஆசியாவில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க கூடாது – சீனா எச்சரிக்கை!

  • June 4, 2023
  • 0 Comments

ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பேசிய அவர், ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும். இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. […]

ஆசியா

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு : 14 பேர் உயிரிழப்பு!

  • June 4, 2023
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. வனத்துறை அலுவலக கட்டப்பகுதியில் ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 5 பேரைக் காணவில்லை என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.  அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் […]

பொழுதுபோக்கு

அனைத்தையும் முறியடித்து முதல் தமிழ் படமாக சாதனை படைத்தது “லியோ”…

  • June 4, 2023
  • 0 Comments

விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும், இதற்காக விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்துள்ளார். படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன, எனவே தயாரிப்பாளர்கள் படத்தின் வியாபாரத்தை திறந்து வைத்துள்ளனர். ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க விநியோக உரிமைகள் விற்கப்பட்டதாகவும், படம் முறையே ரூ.60 கோடி மற்றும் ரூ.16 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, கேரளாவில் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தை ‘லியோ’ முறியடித்து அதிக […]

இந்தியா தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து : தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என உதயநிதி தெரிவிப்பு!

  • June 4, 2023
  • 0 Comments

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்,  தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்திருந்தது. அத்துடன் 8 பேர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல்களை மக்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீப்பதற்காக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட குழுவினர் ஒடிசா சென்றிருந்த நிலையில், தற்போது தமிழகம் திரும்பியுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  […]

ஆசியா

கனமழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஜப்பானின் சாலைகள்

  • June 4, 2023
  • 0 Comments

ஜப்பானில் 3 நாட்களாக பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டல புயலான மார்வார் நாட்டின் முக்கிய தீவான ஹொன்ஷூவில் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவால் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே நாட்டின் மேற்கு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் […]

error: Content is protected !!