காங்கோவிற்கு பயணித்த வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்” என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஜூலை 20, முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எபோலா பரவலைக் கட்டுப்படுத்த […]













