உலகம்

காங்கோவிற்கு பயணித்த வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு

  • July 19, 2026
  • 0 Comments

எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்” என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஜூலை 20, முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது   எபோலா பரவலைக் கட்டுப்படுத்த […]

உலகம்

கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு – வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூடியுள்ள காட்டுத்தீப் புகைக்கு கனடாவே காரணம் என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப் அந்த நாட்டிற்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வன மேலாண்மையில் கனடா “வேண்டுமென்றே அலட்சியம்” செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்தப் புகை “அசுத்தமான, மாசடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற காற்றை” ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டொலர் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார். கனடாவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் 900-க்கும் […]

உலகம்

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் அமெரிக்காவில் வளிமாசடைவு

  • July 16, 2026
  • 0 Comments

கனடாவில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான காட்டுத்தீயிலிருந்து வெளியான அடர்த்தியான புகை, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரையிலான பரந்த நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அசுத்தமான காற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IQAir என்ற கண்காணிப்பு நிறுவனத்தின்படி, டெட்ராய்ட்  (Detroit ) நகரம் உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்டிருந்தது. அங்கு காற்றின் அளவு 600 ஆகப் பதிவானது. இது, அமெரிக்க சுற்றுச்சூழல் […]

உலகம்

கனடாவில் யூதர்கள் செறிந்து வாழும் பகுதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

  • June 23, 2026
  • 0 Comments

கனடாவின் மொன்டிரியலில் திங்கட் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். பெருமளவான யூதர்கள் வசிக்கும் பகுதியில் மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் மற்றும் தாக்குதல்தாரி உள்ளட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்சிச்சூட்டுக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரெஞ்சு மொழி பொது ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ கனடா, தாக்குதல்தாரியை “இன்செல்” சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் விவரித்துள்ளது. இன்செல் என்பதன் பொருள் “விருப்பமின்றி பிரம்மச்சரியத்தை […]

உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்!! பணம் மட்டுமே இலக்கு!

  • May 30, 2026
  • 0 Comments

கனடாவில் சுமார் 1000 பேரை கொண்ட இந்தியக் கும்பல் ஒன்று நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் ( Lawrence Bishnoi) என்று அழைக்கப்படும் இந்த கும்பல் தாக்குதல் எச்சரிக்கை அடங்கிய கடிதத்தை ரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள  காவல் நிலையமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் கனேடிய வணிக நிறுவனங்கள் பணம் செலுத்த மறுத்தல் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக […]

உலகம் செய்தி

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மீது ஏற்றுமதி கட்டுப்பாடு – சீனா அறிவிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

சீனா ஃபென்டானில்  (Fentanyl) தயாரிப்புக்கான  மூன்று மூல வேதிப்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை  இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கு அவற்றின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை போதைப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், செயற்கை போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய மேலும் எட்டு வேதிப்பொருட்கள் குறித்து எச்சரித்து, வணிக நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் […]

உலகம் செய்தி

இஸ்ரேலிய நடவடிக்கைக்கு எதிராக கனடா அழைப்பு

  • May 21, 2026
  • 0 Comments

காசா நோக்கிச் சென்ற குளோபல் சுமுட் (Global Sumud) கப்பலில் இருந்த ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இஸ்ரேலிய தூதுவரிடம் கனடா விளக்கம் கோரியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து உறுதிப்படுத்த இஸ்ரேலிய தூதுவரை அழைக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கனடா பிரதமர் Mark Carney சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும், தடுத்து வைக்கப்பட்ட ஆர்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் துன்புறுத்தப்படும் காணொளியை பகிர்ந்தமை குறித்தும் கார்னி விமர்சித்தார். “வன்முறையைத் […]

உலகம்

கனடாவில் ஹன்டா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து இறங்கிய பிறகு, ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் தற்போது அவர்    பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹண்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

  • March 9, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, தமது அவசரக்கால எண்ணெய் இருப்புகளை கூட்டாக வெளியிடுவது குறித்து G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் இன்று (9) ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து […]

அரசியல் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை: வெளிவிவகார அமைச்சரிடம் தூதுவர் விளக்கம்

  • November 25, 2025
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். “ இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று வெளிவிவகார அமைச்சர் […]