செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

  • December 9, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடர் கட்டாக்கில் உள்ள பரபாட்டி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்நிலையில், நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்கள் பெற்றது. இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்ட்யா(Hardik […]

உலகம் செய்தி

நோர்வேயில் நடைபெறவிருந்த மரியா கொரினா மச்சாடோவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து

  • December 9, 2025
  • 0 Comments

நோர்வேயின்(Norway) ஒஸ்லோவில்(Oslo) நடைபெறும் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, வெனிசுலா((Venezuela) எதிர்க்கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோவின்(Maria Corina Machado) திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரின் இருப்பிடம் தெளிவாகத் தெரியவில்லை மற்றும் விருதை நேரில் பெற முடியுமா என்பது தெளிவாகத் தெரியாததால் நோர்வே நோபல் நிறுவனம் நிகழ்வை ரத்து செய்தது. முதலில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு (GMT […]

உலகம் செய்தி

ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 160ஆக உயர்வு

  • December 9, 2025
  • 0 Comments

பல தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் மேலும் ஒரு உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத இறுதியில் வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது 1980ம் ஆண்டுக்குப் பிறகு உலகின் மிக மோசமான குடியிருப்பு கட்டிட தீ […]

உலகம் செய்தி

அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் சகோதரிகள்

  • December 9, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) சகோதரிகள் அடியாலா(Adiala) சிறைக்கு வெளியே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உஸ்மா கான்(Usma Khan) மற்றும் அலீமா கான்(Aleema Khan) ஆகியோர் சிறை வாயில்களுக்கு வெளியே கூடி, இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், முன்னாள் பிரதமர் பலவீனமானவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் தோன்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். டிசம்பர் 2ம் திகதி அடியாலா சிறையில் இம்ரான் கானை சகோதரி உஸ்மா கான் சந்தித்த சில […]

உலகம் செய்தி

சீனாவில் லஞ்சம் வாங்கிய முன்னாள் வங்கியாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • December 9, 2025
  • 0 Comments

சீனாவில்(China) அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உயர் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிக்கு ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனா ஹுவாரோங்(Huarong) இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின்(CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய்(Bai Tianhui), 2014 மற்றும் 2018 க்கு இடையில் $156 மில்லியனுக்கும் அதிகமாகப் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும், பாய் தியான்ஹுய் தனது செல்வாக்கு மிக்க பதவியை மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தி, அதற்கு பதிலாக பெரும் தொகைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

டிசம்பர் 29ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் நெதன்யாகு

  • December 9, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) டிசம்பர் 29ம் திகதி அமெரிக்காவில்(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை(Donald Trump) சந்திப்பார் என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கும் நெதன்யாகுவின் ஐந்தாவது வருகை இதுவாகும். மேலும், காசாவிற்கான அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கும் என்று பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. “ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் நெதன்யாகு இடையேயான சந்திப்பு […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் உணவு விஷத்தால் 3 பேர் மரணம்

  • December 9, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) கஜுராஹோவில்(Khajuraho) உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவு விஷத்தால் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் பலர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதியில் ஊழியர்கள் நேற்று இரவு உணவை சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலுதவிக்காக கஜுராஹோ(Khajuraho) சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் பின்னர் அவர்களின் நிலை மோசமடைந்ததால் சத்தர்பூர்(Chhatarpur) மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம் : மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை

  • December 9, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினூடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது […]

ஐரோப்பா

ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் – ஜெர்மனி வலியுறுத்தல்!

  • December 9, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து “மிகவும் சுதந்திரமாக” மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஜெர்மன் சேன்சலர் பிர்டரிக் மெர்ஸ் (Chancellor Friedrich Merz )  இன்று அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய உத்தி ஐரோப்பிய நட்பு நாடுகளை பலவீனமானவர்களாக சித்தரிக்கிறது எனக் கூறிய அவர், தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பாவின்  சுதந்திரமான பேச்சு மற்றும் இடம்பெயர்வு கொள்கையை விமர்சிக்கிறது […]

ஐரோப்பா செய்தி

மொஸ்கோ அருகே 7 பேருடன் விபத்துக்குள்ளான ரஷ்ய ராணுவ விமானம்

  • December 9, 2025
  • 0 Comments

பழுதுபார்க்கும் பணிகளுக்குப் பிறகு சோதனையின் போது ஒரு ரஷ்ய(Russia) இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் ஏழு பேர் விமானத்தில் இருந்ததாகவும், அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பது தெரியவில்லை என்றும் TASS மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “இவானோவோ(Ivanovo) பிராந்தியத்தில், பழுதுபார்ப்புகளைத் தொடர்ந்து சோதனையின் போது AN-22 இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது” என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், விமானம் மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக […]

error: Content is protected !!