ஐரோப்பா செய்தி

இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் மருத்தவர்கள் – சிக்கலில் சுகாதாரத்துறை!

  • December 15, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள குடியிருப்பு மருத்துவர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை நிராகரித்துள்ள நிலையில் வரும் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 83 சதவீத வாக்குப்பதிவில் 65 சதவீதமான  மருத்துவர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு சாதகமாக வாக்களித்துள்ளதாக  மருத்துவ சங்கம் (BMA) உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் சூப்பர் புளூ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற இந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களின் வெலைநிறுத்தமானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என NHS அறக்கட்டளை எச்சரித்துள்ளது. வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: சக் க்ராலி(Zak Crawley), பென் டக்கெட்(Ben Duckett), ஓலி போப்(Ollie Pope), ஜோ ரூட்(Joe Root), ஹரி ப்ரூக்(Harry Brook), பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes), ஜேமி ஸ்மித்(Jamie Smith), வில் […]

அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை தோல்வி!

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “ பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன. அதனை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும். மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளது. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து […]

உலகம்

பிரசவ செலவை ஈடுகட்டும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா!

  • December 15, 2025
  • 0 Comments

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய மகப்பேறு மற்றும் அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் உட்பட அனைத்து பிரசவ செலவுகளையும் ஈடுகட்டும் வகையில் ஒரு விரிவான கொள்கையை அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து மூன்றாம் நிலை மருத்துவமனைகளும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரசவத்தின் போது எபிடூரல் மயக்க மருந்தை (epidural anaesthesia) வழங்க வேண்டும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்குள் இரண்டாம் நிலை […]

அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குவது குறித்து ஆராய்வு!

  • December 15, 2025
  • 0 Comments

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

பொண்டி துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கண்டனம்

  • December 15, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் , இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என ஜனாதிபதி மேலும் கூறினார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் நேற்றைய […]

இலங்கை

இலங்கை இராணுவத்தினரின் நெகிழ்ச்சியான செயல்!

  • December 15, 2025
  • 0 Comments

பேரிடர் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட  300,000 ரொக்கம் மற்றும் சுமார்   5 மில்லியன் ரூபாய்  மதிப்புள்ள தங்க நகைகளை இலங்கை இராணுவ வீரர்கள் அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது. ஹங்குரான்கெத்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலச்சரிவால் முற்றிலுமாக அழிவடைந்த   வீட்டின் இடிபாடுகளில் இருந்து  பணம் மற்றும் நகை என்பன  மீட்கப்பட்டதாகவும் அவை பாதுகாப்பாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் […]

உலகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தாய்லாந்து!

  • December 15, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் பெப்ரவரி 08 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையம் இன்று  தெரிவித்துள்ளது. பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பிரச்சினையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு எதிர்கட்சிகள்  அழைப்பு விடுக்க தயாரானதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார். நீண்டகால எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து கம்போடியாவுடன் பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ள நிலையில் வர இருக்கும் தேர்தல் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.  

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டிட்வா புயல் – உலக வங்கியிடமிருந்து $120 மில்லியன் நிதியுதவி

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு உலக வங்கி குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த பேரிடரை எதிர்கொண்டு இலங்கையர்கள் காட்டிய மீள்தன்மை மற்றும் உயிர்களை காப்பாற்றவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் கோரிக்கையை தொடர்ந்து, உலக வங்கி குழு 120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்குகிறது. இந்த நிதி, நடப்பு உலக வங்கி திட்டங்களில் இருந்து […]

இலங்கை

ஜப்பான் பேரிடர் நிவாரண குழுவின் பணிகள் நிறைவு – இன்று நாடு திரும்புகின்றனர்

  • December 15, 2025
  • 0 Comments

ஜப்பான் பேரிடர் நிவாரண (JDR) மருத்துவக் குழு, தங்கள் பணியை நிறைவு செய்து இன்று நாட்டிற்கு திரும்புகின்றனர். நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 31 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு டிசம்பர் 03 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தனர். சிலாபம் பொலிஸ் மைதானத்தில் அவர்களால் நிறுவப்பட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர […]

error: Content is protected !!