இலங்கை

தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் விமான நிலையங்கள்

  • June 24, 2025
  • 0 Comments

பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்கக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை விமான நிலையம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது. வளைகுடாவின் சில பகுதிகளில் அதிகரித்த பதற்றங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

செய்தி

ஈரான் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தில் உடன்பாடு எதுவுமில்லை என ஈரான் அறிவிப்பு

  • June 24, 2025
  • 0 Comments

ஈரான் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பாக இஸ்ரேலியப் படைகள் அவற்றின் தாக்குதல்களைக் கைவிட்டால் மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பிறகே ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஈரான் முடிவெடுக்கும் என்று அப்பாஸ் தெரிவித்தார். இஸ்ரேலே தாக்குதலை ஆரம்பித்தது ஈரான் […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • June 24, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த […]

உலகம்

மத்திய கிழக்கில் மோதல்கள் காரணமாக விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

  • June 24, 2025
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் மண்டலங்களைத் தவிர்ப்பதால் அல்லது சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதால் விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் என்று உலகளாவிய விமான நிறுவனங்கள் கணித்துள்ளன. ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீது விமான நிறுவனங்கள் வான்வெளியைத் தவிர்ப்பதால் சில விமானங்கள் நீட்டிக்கப்படுவதாக விமான பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கிறது மற்றும் ஒரு விமானத்தின் செலவை அதிகரிக்கிறது என்று விமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. விமான நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் விமான வழித்தடங்களைத் திட்டமிடுவதாகவும், Ops Group […]

ஆஸ்திரேலியா

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை ஏற்றி சென்ற விமானம் டுபாயில் தரையிறக்கம்

  • June 24, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச் செல்லும் விமானம் டுபாயில் தரையிறங்கியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து ஜோர்தானின் Amman நகரத்தில் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று பேருந்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஷேக் ஹுசைன், ஜோர்தான் நதி மற்றும் வாடி அரபா கடவைகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் மற்றும் மூடப்படலாம் என்பதால், வெளியேறுபவர்கள் தங்கள் தகவல்களை வழங்குவது முக்கியமாகும். இப்பகுதியில் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய […]

மத்திய கிழக்கு

ஈரானுக்குப் பதிலடி கொடுக்க தயாராகும் கட்டார் – தாக்குவதற்கு உரிமை உள்ளதாக அறிவிப்பு

  • June 24, 2025
  • 0 Comments

அல் உதேய்த் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தனது அரசுரிமை, வான் வெளி, சர்வதேச சட்டம், ஐக்கிய நாட்டுச் சாசனம் ஆகியவற்றின் மீதான அத்துமீறல் என்று கட்டார் வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மஜேட் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார். ஈரானிய ஏவுகணைகளைக் கட்டார் வெற்றிகரமாக இடைமறித்ததாக கூறிய அவர், தளத்திலிருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஈரானின் தாக்குதலை மதிப்பிட்டு உரிய பதிலடி கொடுக்கும் உரிமை கட்டாருக்கு இருப்பதாக மஜேட் கூறினார். அல் உதேய்த் விமான படைத் தளம் மீது […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஈரான் இணக்கம் – டிரம்ப் அறிவிப்பு

  • June 24, 2025
  • 0 Comments

போர் நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 12 நாட்கள் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

உலகம் செய்தி

ஈரான் மீது தாக்குதல் – அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்த சீனா

  • June 24, 2025
  • 0 Comments

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்கா மீதான நம்பிக்கையைச் சிதைத்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் ஒரு நாடு என்ற முறையிலும் அமெரிக்காவின் நம்பகத்தன்மை சரிந்துள்ளதாகச் சீனாவின் ஐக்கிய நாட்டுத் தூதர் தெரிவித்தார். போர் விரிவடைவதைத் தடுக்க இஸ்ரேல் உடனடியாக சண்டைநிறுத்த முயற்சியை எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிடப்படுகின்றது. மோதலை பெரிதுபடுத்தும் எந்தவொரு திடீர் வன்முறையிலும் இருதரப்பும் ஈடபட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் நடவடிக்கை அபாயகரமானது, பிர்ச்சினையைத் தூண்டிவிட்டிருக்கிறது என்று சீன […]

செய்தி விளையாட்டு

INDvsENG – நான்காம் நாள் முடிவில் 21 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

  • June 23, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 96 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய […]

செய்தி வட அமெரிக்கா

கோஸ்டாரிகா அதிபர் சாவ்ஸ் மீது சட்டவிரோத பிரச்சார நிதியுதவி குற்றச்சாட்டு

  • June 23, 2025
  • 0 Comments

கோஸ்டாரிகாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஜனாதிபதி ரோட்ரிகோ சாவேஸ் மற்றும் ஆறு அரசு அதிகாரிகள் மீது சட்டவிரோத பிரச்சார நிதியுதவி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, ஜனாதிபதியின் விலக்குரிமையை நீக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே டினோகோ மற்றும் சாவேஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஸ்டீபன் பிரன்னர் ஆகியோர் அடங்குவர் என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 இல் தொடங்கிய விசாரணையில், சாவேஸின் […]

error: Content is protected !!