ஆட்டிசம் ஆதரவுக்காக ரூ.250 மில்லியன் தேசிய முயற்சியைத் தொடங்கும் இலங்கை
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) மற்றும் பிற நரம்பியல் வளர்ச்சி நிலைமைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையங்களின் தேசிய வலையமைப்பை நிறுவுவதற்கான திட்டங்களுடன் இலங்கை அரசாங்கம் முன்னேறி வருகிறது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான கருத்துரு முன்மொழிவைத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, பல அமைச்சுக்கள் […]













