இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மஹிந்தவின் நெருங்கிய உறவினர் கைது

  • August 6, 2025
  • 0 Comments

மஹிந்தவின் நெருங்கிய உறவினரும் முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி

தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்!

  • August 6, 2025
  • 0 Comments

நமது உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. தண்ணீரில் ஊட்டச்சத்து உள்ளது. இது நமது வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. நமது உடலுக்குள் நடக்கும் பெரும்பாலான ரசாயன எதிர்வினைகளில் நீர் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வியர்வை, சிறுநீர் மற்றும் சுவாசம் மூலம் நாம் தொடர்ந்து உடலில் இருந்து நீரை வெளியேற்றி வருகிறோம். இதனால், போதுமான தண்ணீர் அருந்துவதை உறுதி செய்வது உடலின் சமநிலைக்கு முக்கியம். இதனால், நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.பொதுவாக, ஒவ்வொரு நாளும் அதிகளவு தண்ணீர் குடிப்பது, […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை அரச ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த விசேட திட்டம்

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கை அரச ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில், பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் […]

மத்திய கிழக்கு

காசாவில் தினசரி 28 குழந்தைகள் உயிரிழப்பு – UNICEFஅதிர்ச்சி தகவல்

  • August 6, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான நீடிக்கும் போர் காரணமாக, காசா பகுதியில் தினசரி சராசரியாக 28 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்புகள், தீவிரமான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பசியின் விளைவாக இந்த சாவுகள் ஏற்படுகின்றன என்று யூனிசெஃப் கூறியுள்ளது. போர் காரணமாக மருத்துவ வசதிகள், சுகாதாரம் மற்றும் உணவுப் பத்திகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தைகள் மீது ஏற்படும் விளைவுகள் மிகுந்த பயங்கரமானவை என்றும், இந்த அழிவுகளைத் தடுக்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனதை அமைதிப்படுத்த உதவும் 5 இலவச செயலி

  • August 6, 2025
  • 0 Comments

வேலைப்பளு, மன அழுத்தம், அதிக சிந்தனை என பல காரணங்களால் மன அமைதி குறைந்து தவிப்பவர்களுக்கு, நல்ல நண்பரின் ஆறுதலோ அல்லது ஒரு மனநல ஆலோசகரின் உதவியோ மிகவும் அவசியமானது. ஆனால், அது எப்போதும் சாத்தியமில்லை. இதுபோன்ற சமயங்களில், சில இலவச மொபைல் செயலிகள் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், எண்ணங்களைச் சீரமைக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் உதவும் 5 இலவச மொபைல் ஆஃப்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம். 1. PI Bot: செயற்கை […]

விளையாட்டு

இங்கிலாந்து வெற்றி பெறும் என நினைத்தேன் – ஏமாற்றத்தில் ஸ்டூவர்ட் பிராட்

  • August 6, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், இதில் 2 போட்டியில் இங்கிலாந்து அணியும், 2 போட்டியில் இந்தியா அணியும் வெற்றிபெற்றது. 1 ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது. எனவே, இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்ற காரணத்தால் தொடர் முடிவு இல்லாமல் சமநிலையில் முடிந்தது. சமநிலையில் முடித்தாலும் கூட இந்த தொடரில் நடந்த 5 போட்டிகளும் பரபரப்பாக இருந்தது என்று […]

உலகம்

மூளையின் சிந்தனை திறனை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு

  • August 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தளங்களை அதிகமாக பயன்படுத்துவது மனித மூளையின் சிந்தனை திறனை பெரிதும் பாதிக்கக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. MIT பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ChatGPT போன்ற AI கருவிகளை தொடர்ந்து பயன்படுத்தும் பயனர்களின் சிந்தனை திறன் சுமார் 47% வரை குறைந்துவிட்டதாக MIT விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குறுகிய நேரத்திற்கு முன்பு எழுதிய தகவல்களையே நினைவில் வைத்திருக்க இயலாத நிலை இந்த […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • August 6, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய எலி – நெருக்கடி அச்சத்தில் மக்கள்

  • August 6, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் யோர்க்ஷயரில் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, மேலும் இந்த உயிரினம் ஏன் இவ்வளவு பெரியது என்று பலர் குழப்பத்தில் உள்ளனர். சுமார் 55 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த எலி அசாதாரணமானது அல்ல என்று வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இப்பகுதியில் பரவலாக காணப்படும் எலிகளின் தொல்லைக்கு மத்தியில் இது மற்றொரு பிரச்சினையின் தொடக்கமாகியுள்ளதென என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

அண்ட வெளியில் இருந்து சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவும் வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

  • August 6, 2025
  • 0 Comments

அண்ட வெளியில் இருந்து சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவிய ஒரு அந்நிய விண்கல் விஞ்ஞானர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 31/அட்லஸ் (31/ATLAS) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 2026ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி, வியாழன் கிரகத்தை நெருங்கும் என கணிக்கப்படுகிறது. இந்தக் கணிப்பை விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் வானியல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது என நம்பப்படுகிறது. பொதுவாக இவ்வாறான விண்கற்கள் சூரிய குடும்பத்தில் இருந்து தான் தோன்றுகின்றன. ஆனால், 31/அட்லஸ் எனப்படும் இவ்வின்வெளி […]

error: Content is protected !!