இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

காஸா தாக்குதலில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! ஒப்புக் கொண்ட இஸ்ரேல் முப்படை தளபதி

  • September 15, 2025
  • 0 Comments

இதுவரை காஸா மீது நடத்திய போர் நடவடிக்கைகளில், தாம் சர்வதேச சட்டங்களை பின்பற்றவில்லை என இஸ்ரேல் முப்படை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார். “காஸாவில் 22 லட்சம் மக்களில் 10 சதவீதத்துக்கும் மேல் பேர் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ளனர். இது ஒரு நாகரிகமான போர் அல்ல. யாரும் நீதியை கருத்தில் கொள்ளவில்லை. மேலும், தனது நடவடிக்கைகளை இராணுவ சட்ட ஆலோசகர் யிபாத் தோமா-யெருஷலாமி உள்ளிட்டோர் கட்டுப்படுத்தவில்லை. இதனால், இஸ்ரேல் .ராணுவ சட்ட ஆலோசகர்கள் வெறும் ஆலோசனை வழங்குபவர்களாக மட்டுமே உள்ளனர்” […]

ஆப்பிரிக்கா செய்தி

புதிய பிரதமர் மற்றும் எரிசக்தி அமைச்சரை நியமித்த அல்ஜீரிய ஜனாதிபதி

  • September 14, 2025
  • 0 Comments

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபவுன், அமைச்சரவை மறுசீரமைப்பில், நாட்டின் புதிய பிரதமராக சிஃபி கிரிப்பையும், எரிசக்தி அமைச்சராக மௌரத் அட்ஜலையும் நியமித்துள்ளார். கடந்த மாதம் டெப்பவுன் நாதிர் லார்பாவின் பதவிக்காலம் முடிவடைந்ததில் இருந்து தொழில்துறை அமைச்சராக இருந்த சிஃபி கிரிப், தற்காலிக பிரதமராகப் பணியாற்றி வந்தார். அல்ஜீரியாவின் அரசு மின்சார நிறுவனமான சோனெல்காஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக மௌரத் அட்ஜல் இருந்தார். நிதி, வர்த்தகம் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் மேலும் தொடர்வதாக ஜனாதிபதி அலுவலகம் […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தால் கைவிடப்பட்ட ஸ்பெயின் சைக்கிள் ஓட்ட போட்டி

  • September 14, 2025
  • 0 Comments

மாட்ரிட்டில் நடந்த பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக Vuelta a Espana சைக்கிள் ஓட்டப் பந்தயத்தின் இறுதி போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதனால் டேனிஷ் வீரர் ஜோனாஸ் விங்கேகார்ட் ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஸ்பானிஷ் தலைநகரில் உள்ள பந்தயப் பாதையின் சில பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததனால் போட்டி கைவிடப்பட்டது. மாட்ரிட்டின் வீதிகளில் 100,000 பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் திரண்டனர் குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியன் ரிக்கி ஹாட்டன் 46 வயதில் காலமானார்

  • September 14, 2025
  • 0 Comments

முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியனான ரிக்கி ஹேட்டன் 46 வயதில் இறந்துவிட்டார் என்பதை பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்களால் “தி ஹிட்மேன்” என்று அறியப்பட்ட ஹேட்டன், மான்செஸ்டருக்கு அருகிலுள்ள ஹைடில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். மான்செஸ்டரில் பிறந்த இந்த குத்துச்சண்டை வீரர் பிரிட்டனின் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரானார், லைட்-வெல்டர்வெயிட் மற்றும் வெல்டர்வெயிட் போட்டிகளில் உலக பட்டங்களை வென்றார். 15 ஆண்டுகால தொழில்முறை வாழ்க்கையில், 2012 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு […]

உலகம் செய்தி

லண்டனில் நடந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு எலான் மஸ்க் ஆதரவு

  • September 14, 2025
  • 0 Comments

பிரித்தானியா தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்தனர். இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். […]

செய்தி வட அமெரிக்கா

3 நாள் பயணமாக பிரித்தானியா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி

  • September 14, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் பயணமாக 16ம் திகதி பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் பிரித்தானியா மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்க உள்ளார். பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியா செய்தி

நேபாளத்தில் போராட்டத்தின் போது தப்பியோடிய கைதிகளில் 3000ற்கும் மேற்பட்டோர் மீண்டும் கைது

  • September 14, 2025
  • 0 Comments

நேபாளத்தில் அரசுக்கு எதிராக கடந்த 8ம் திகதி முதல் நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறையின்போது சிறைகளில் இருந்து 14000 மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர். அந்த வகையில் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய பொலிஸார், ராணுவத்தினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற 3723 கைதிகளை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். மேலும் 10320 கைதிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று […]

செய்தி விளையாட்டு

AsiaCup M06 – 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

  • September 14, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. பர்ஹான் 40 ரன்னும், ஷாஹின் அப்ரிடி 33 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 […]

இலங்கை செய்தி

மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் செல்லும் இலங்கை ஜனாதிபதி

  • September 14, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 22ம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார். தனது பயணத்தின் போது, ​​பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், அதே போல் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திக்க உள்ளார். அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பிறகு, ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 26ம் திகதி ஜப்பானுக்கு அரசு முறைப் பயணம் […]

இந்தியா செய்தி

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – ஒடிசாவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பாடசாலை மாணவர்கள்

  • September 14, 2025
  • 0 Comments

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவியதால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது வகுப்புத் தோழர்கள் விளையாட்டாக கண்களில் பசையைத் தடவி வைத்துள்ளனர். அந்த மாணவர்கள் காலையில் எழும்போது அவர்களின் கண்கள் அதிகப்படியான இரசாயனத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் இந்த […]

error: Content is protected !!