செய்தி வட அமெரிக்கா

கணவரின் கொள்கைக்காக கொலையாளியை மன்னித்த சார்லி கிர்க்கின் மனைவி

  • September 22, 2025
  • 0 Comments

அமெரிக்க வலதுசாரி ஆர்வலர் சார்லி கிர்க்கின் மனைவியான 36 வயது எரிகா கிர்க், கணவரின் நினைவு நிகழ்வில் ஆற்றிய உரையில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். “என் கணவர் சார்லி, இளைஞர்களை காப்பாற்ற விரும்பினார், ஆகையால் அந்த மனிதர், அந்த இளைஞனை நான் மன்னிக்கிறேன்” என்று அரிசோனாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட 60,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 31 வயதான சார்லி கிர்க், செப்டம்பர் 10 அன்று உட்டா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 4 மாத பேத்தியை கொலை செய்த பாட்டி

  • September 22, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் சியோனி மால்வாவின் பர்கேடி கிராமத்தில் ஒரு பாட்டி தனது நான்கு மாத பேத்தியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப வாரிசாக ஆண் குழந்தையை எதிர்பார்த்த பாட்டி அதிருப்தியில் பேத்தியை கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது. மீனாபாய் அஸ்வரே என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, முற்றத்தில் ஊஞ்சலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது வாயில் துணியை திணித்து மூச்சுத் திணறடித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் தாய் மீரா, வீட்டின் பின்னால் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் ஆயுத குற்றச்சாட்டில் காலிஸ்தானி பயங்கரவாதி இந்தர்ஜித் சிங் கோசல் கைது

  • September 22, 2025
  • 0 Comments

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் முக்கிய உதவியாளர் இந்தர்ஜித் சிங் கோசல் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 2023ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இறந்த பிறகு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ)ன் முக்கிய கனடா அமைப்பாளராக இந்தர்ஜித் சிங் கோசல் ஆனார். ஒட்டாவாவில் துப்பாக்கிகள் வைத்திருந்தது தொடர்பான பல குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 36 வயதான அவர் ஒரு வருடத்திற்குள் கனேடிய காவல்துறையினரால் கைது […]

ஆசியா செய்தி

விமான சக்கரத்தில் ஒளிந்து காபூலில் இருந்து டெல்லி வந்த 13 வயது சிறுவன்

  • September 22, 2025
  • 0 Comments

காபூலில் இருந்து சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் பயணித்து 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் ஒருவர் இந்திய தலைநகர் டெல்லியை வந்தடைந்துள்ளார். காபூலில் இருந்து புறப்பட்ட KAM ஏர்லைன்ஸ் விமானத்தின் தரையிறங்கும் சக்கர பெட்டிக்குள் நுழைந்த சிறுவன் 2 மணி நேர ஆபத்தான பயணத்திற்குப் பிறகு இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமானம் தரையிறங்கிய பிறகு சுற்றித் திரிந்த 13 வயது சிறுவன் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி முக்கிய செய்திகள்

60 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி

  • September 22, 2025
  • 0 Comments

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளார். டிசம்பர் 2024ல் பஷர் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஐ.நாவின் 80வது சபை அமர்வில் அல்-ஷாரா கலந்து கொள்ளவுள்ளார். இந்த அமர்வில் அமைதி மற்றும் பாதுகாப்பு முதல் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு வரையிலான முக்கிய உலகளாவிய […]

பொழுதுபோக்கு

இ-சிகரெட் சர்ச்சை: ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை?

  • September 22, 2025
  • 0 Comments

ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட இ-சிகரெட்களை சினிமா காட்சிகளில் பயன்படுத்தியதற்காக நடிகர் ரன்பீர் கபூர், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மும்பை காவல் துறைக்கு வலியுறுத்தியுள்ளது. அண்மையில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ஒரு திரைத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றிருந்த இ-சிகரெட் காட்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து ரன்பீர் கபூர் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நைஜீரியா நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

  • September 22, 2025
  • 0 Comments

கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நைஜீரிய நாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 2012 ஜூலை 17ம் திகதி சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, ஒரு கூரியர் அலுவலகத்தில் மூன்று பார்சல்களில் சர்வதேச சந்தையில் 2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 1.195 கிலோ ஹெராயின் மற்றும் 200 கிராம் மெதகுவாலோனைக் கண்டுபிடித்தது. இதனை தொடர்ந்து, ஈரோட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 40 வயது […]

செய்தி மத்திய கிழக்கு

காசாவில் இரு மருத்துவமனைகளின் சேவைகள் நிறுத்தம்

  • September 22, 2025
  • 0 Comments

கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாலும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் ஏற்பட்ட சேதத்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் காசா நகரத்தின் இரண்டு மருத்துவமனை சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சினால் அல்-ரான்டிசி குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கண் மருத்துவமனையின் அருகே தாக்குதல் நடந்துள்ளதால் அங்கு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இஸ்ரேலின் இனப்படுகொலை கொள்கையின் ஒரு பகுதியாக காசா மாகாணத்தில் உள்ள சுகாதார அமைப்பை வேண்டுமென்றே […]

செய்தி விளையாட்டு

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்க விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி காக்

  • September 22, 2025
  • 0 Comments

அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து T20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் இடம் பெற்றுள்ளார். T20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இத்தாலியின் ரோமில் அணித்திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

  • September 22, 2025
  • 0 Comments

“காசாவில் நடந்த இனப்படுகொலையைக் கண்டிக்கும்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வந்துள்ளன. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் உள்ள இத்தாலியின் தீவிர வலதுசாரி அரசாங்கம் இப்போதைக்கு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரோமில் ஒன்றுக்கூடிய சுமார் 20,0000 மக்கள் “சுதந்திர பாலஸ்தீனம்!” என்று கூச்சலிட்டு பாலஸ்தீனக் கொடிகளை […]

error: Content is protected !!