இலங்கை செய்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்க

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 100,000க்கும் அதிகமான பிறப்புகள் குறைந்துள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலைமையால், முதியோர் சமூகம் அதிகரிப்பதன் மூலமும், இளம் சமூகம் குறைவதன் மூலமும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு, இந்த நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரம்ாகும்.

இது 2023ஆம் ஆண்டு 2 லட்சத்து 47 ஆயிரமாக குறைந்துள்ளது.

மேலும், 2017 ஆம் ஆண்டில், வருடாந்த இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது, ஆனால் அது 2023 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 80ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமையால், எதிர்காலத்தில் நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும், இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என, மகளிர் மருத்துவ நிபுணரும், மகப்பேறு மருத்துவருமான சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content