இலங்கை செய்தி

தகாத உறவால் பிறந்த சிசு முச்சக்கரவண்டியில் சடலமாக மீட்பு

அக்கரபத்தனை வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் சிசுவின் சடலம் தொடர்பில், பெண் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் அக்கரபத்தனை பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிசுவின் தாயார் 24 வயதான திருமணமாகாத பெண் எனவும், இவர் முச்சக்கரவண்டி சாரதியுடன் (28) தொடர்பு வைத்திருந்தமையும் பொலிஸ் விசரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு முச்சக்கரவண்டி சாரதி திருமணமானவர் என்றும் அவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார் என்பதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

சிசுவை பிரசவித்த பெண், முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டுக்குப் பக்கத்தில் வசிப்பதாகவும், அவர் மாவனெல்ல பிரதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில், முச்சக்கரவண்டியின் சாரதி, தனது சகோதரனுடைய முச்சக்கரவண்டியில் மாவனல்லை பிரதேசத்திற்குச் சென்று அவரை அக்கரப்பத்தனை தோட்டத்துக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சிசு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு சில நாட்களாகி இருந்ததாகவும், குழந்தையின் கழுத்தில் கம்பி ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது படுகொலையா என்பது பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டி சாரதியின் தாய் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பொலித்தீன் பையில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.

சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா பதில் நீதவான் விஜேவிக்கிரமவினால் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்குமாறு அக்கரபத்தனை பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content