Tamil News

மன்னம்பிட்டி பாலத்திற்குள் பாய்ந்த பஸ்; 9 பேர் மரணம்… தேடுதல் தீவிரம்-காணொளி

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version