பிரான்ஸில் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2024/04/db05a0e3-04ab-44c1-9db1-6285526d1923.jpg)
பிரான்ஸில் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்வதாக 3,826 பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை மிகப்பெரிய தொகை என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கணக்குகள் இரஷ்யாவின் நிலைப்பாடுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், உக்ரேனுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தகவல்களை AI Forensics எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் 30 மில்லியன் பேர் பேஸ்புக் மற்றும் இஸ்டகிராம் சமூகவலைத்தளத்தினை பயன்படுத்துகிறார்கள். அவர்களில் 3,826 கணக்குகள் இஷ்யாவுக்கு ஆதரவான செய்திகளை பகிர்வதாகவும், கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் அதிகமானோர் அவ்வாறு பகிரப்பட்ட செய்திகளை பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.