இந்தியா

திருமண விழாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து… 3 குழந்தைகள் உள்பட அறுவர் பலி!

பீகாரில் திருமண விழாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பசுக்களும் பலியாகின.

பீகார் மாநிலம், தர்பங்கா அருகே பஹேரா பகுதியில் உள்ள அலி நகரில் திருமண விஷேச வீட்டில் நேற்று இரவு 11.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விஷேசத்தை முன்னிட்டு அங்கு போடப்பட்டிருந்த கொட்டகையில் தீப்பிடித்து. திருமண கொண்டாட்டத்தின்போது, பட்டாசு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்து நிகழ்ந்த இடம்

தீ விபத்து குறித்து தர்பங்கா மூத்த பொலிஸ் சூப்பிரண்டு ஜகுநாத் ரெட்டி கூறுகையில், “தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. சிறிது நேரத்தில் தீ அணைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இயன்ற அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜீவ் ரோஷன் தெரிவித்துள்ளார்.திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content