பொழுதுபோக்கு

கம்பேக் கொடுக்கும் கவுண்டமணி… ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி நடித்து வரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர். இன்றளவும் அவரது நகைச்சுவைக் காட்சிகளை ரீப்பீட் மோடில் பார்த்து ரிலாக்ஸ் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், நீண்ட வருடங்களாக மீடியாவில் அதிகம் தலைக்காட்டாமல் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கவுண்டமணி தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார். சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் இதன்படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

’ஒத்த ஓட்டு முத்தையா’

கவுண்டமணி அரசியல் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் உருவாக்கி இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்தப் படத்தில் கவுண்டமணி, யோகி பாபு தவிர்த்து நடிகர்கள் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், இந்தப் படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content