பொழுதுபோக்கு

“கடைசி விவசாயி” படத்தின் நடிகை அடித்துக் கொலை – பரபரப்பு செய்தி

‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை, அவரின் மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார்.

இவருக்கு நாமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மூத்த மகன் நாமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த 15 ஆண்டுகளாகத் தாயுடன் வசித்து வருகிறார்.

மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மது அருந்தப் பணம் கேட்டு தாய் காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது அருந்தப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

(Visited 28 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்