இலங்கையில் குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

இலங்கையில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி மேலதிக டோஸ் இனை வழங்கும் வேலைத்திட்டம் இன்று(06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயியல் துறை பிரதம விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை முதன்மையாகக் கொண்டு ஒரு நாள் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படும்.
அன்றைய தினம் இந்த மாவட்டங்களின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)