பொழுதுபோக்கு

“சலார்” படத்திற்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாக உள்ள சலார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பளம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா அளவில் உச்ச நடிகராக உருவெடுத்தார் பிரபாஸ். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் எல்லாம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன.

ஆனால் பாகுபலிக்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷியாம், ஆதி புருஷ் ஆகிய மூன்று திரைப்படங்களும் அட்டர் பிளாப் ஆகின. இருந்தாலும் பிரபாஸின் மார்க்கெட் தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் உள்ளது.

அவர் நடிப்பில் தற்போது சலார் என்கிற பிரம்மாண்ட திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

பிரபாஸும் இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருக்கிறார். சலார் திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை அதாவது டிசம்பர் 22-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

See also  மீண்டும் பூதாகரமாக வெடித்தது சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து!! பொங்கிய ஜோடிகள்

சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடித்திருக்கிறார்.

திமிரு படத்தில் வில்லையாக மிரட்டிய ஷ்ரேயா ரெட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேஜிஎப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது.

இந்நிலையில், சலார் படத்துக்காக நடிகர் பிரபாஸ் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்துக்காக அவர் ரூ.100 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். இதுதவிர இப்படத்தின் லாபத்தில் இருந்து 10 சதவீதம் தொகையை ஷேர் ஆக பெற்றுக்கொள்ளவும் பிரபாஸ் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இதன் ஷேர் மூலமும் பிரபாஸுக்கு ரூ.100 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content