இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் பேருந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

“ஜனவரி மாதத்தில் இருந்து பேருந்து இறக்குமதிக்கு சாதாரணமாக ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சம் ரூபாய் செலவாகும். 18% வாட் வரி அதிகரிப்பால் மேலும் 20 லட்சம் அதன் விலை உயரும்.

அந்தத் தொகைக்கு பேருந்தினை கொண்டுவந்து பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள பஸ் உரிமையாளர்களுக்கு முடியாது. அத்துடன் உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, பரமாரிப்பு செலவு அதிகரித்து வருகிறது.

மிகப் பாரதூரமான விடயம் எரிபொருள் விலை உயர்வு ஆகும் எரிபொருளுக்கும் வெட் வரி விதிக்கப்பட்டவுள்ளது. அப்போது டீசல் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். பொது மக்களுக்கே இது சிக்கலை கொடுக்கும்.

இவை அனைத்தும் அதிகரித்தால் மீண்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் போக்கு உள்ளது. இதுபற்றி ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 55 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்