பிரித்தானியாவில் அலங்காரப் பொருளாக இருந்த வெடிகுண்டு – தம்பதியின் செயலால் அதிர்ச்சி
பிரித்தானியாவில் ஒரு தம்பதி பல ஆண்டாகப் பழைய வெடிகுண்டு என்ற தெரியாமல் அதனை தங்களின் வீட்டுப் பூங்காவில் அலங்காரப் பொருளாக வைத்திருந்துள்ளனர்.
ஆனால் அது வெடிகுண்டு எனத் தெரிந்த பின்பும் அதை விட்டுப் பிரிய மனமில்லை சியான், ஜெப்ரி எட்வர்ட்ஸ் தம்பதி என்ற தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.
பெம்ப்ரோக் ஷியரை சேர்ந்த அவர்கள் அது பொம்மை வெடிகுண்டு என்று எண்ணியுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த வெடிகுண்டைக் பொலிஸ் அதிகாரி ஒருவர் அடையாளம் கண்டார்.
சென்ற வாரம் அந்த குண்டு தகர்த்தப்பட்டது. அந்த வெடிகுண்டு தமது பழைய நண்பர் போன்றது என்றார் 77 வயது ஜெப்ரி எட்வர்ட்ஸ்.
அது தகர்த்தப்பட்டது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். வெடிகுண்டு 100 ஆண்டுகளுக்கு முன்பு தமது உறவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.