இந்தியா

தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்!

இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.  தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக சத்தீஸ்கர்,  ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.

இந்நிலையில் தெலுங்கானா புதிய எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா,  சத்தீஸ்கர்,  மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் திகதி முதல் நவம்பர் 30-ந் திகதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (04.12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!