இலங்கை

யாழில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு அழைப்பு:

மேல்மருவத்தூர் அருட்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறை சமாதிநிலையடைந்த 45 ஆவது நாளினையொட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பணத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 03.12.2023 ஞாயிறுக்கிழமை யாழ் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் காலாசார மண்டபத்தில் காலை 9 மணிமுதல் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த அன்னதான நிகழ்வினை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தின் இலங்கை கிளை ஏற்பாடு செய்துள்ளது.

சுவிஸ் பேர்ன் மன்றசக்திகள், லண்டன் ஈஸ்ற்ஹாம் மன்றசக்திகளும் லண்டன் ஓம்சக்தி அம்மா காப்பகம் சக்திகளும் மற்றும் அவுஸ்ரேலியா குயின்ஸ்லான்ட் சக்திகள் இதற்கு நிதி அருசனை வழங்கியுள்ளனர்.

குறித்த அன்னதான நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம் என மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தின் நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!