உலகம் செய்தி

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்தின் இறுதி நாள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாள் இன்றாகும்.

அதன்படி, ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அசல் ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம், ஆனால் காசா பகுதியில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் போர்நிறுத்த காலத்திற்குப் பிறகு முழு பலத்துடன் மீண்டும் தொடங்கும் என்று கூறினார்.

நேற்று பதினான்கு இஸ்ரேலியர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் அடங்கிய குழுவை ஹமாஸ் விடுவித்தது. அவர்களில் நான்கு வயது சிறுமியும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று ஹமாஸ் பணயக் கைதிகளின் மற்றொரு குழுவை விடுவித்துள்ளது, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளையும் விடுத்துள்ளது.

ஹமாஸ் இதுவரை 58 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. 117 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
See also  மகளிர் T20 உலகக் கோப்பை - முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேசம்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content