உலகம் செய்தி

ஹமாஸ் போராளிகள் பணயக்கைதிகளை பிடிக்கும் காணொளியை வெளியிட்டது இஸ்ரேல்

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

இது தொடர்பான காட்சிகளையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்ஷிஃபா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராக்களில் பதிவான தரவுகளின் ஊடாக இஸ்ரேல் இராணுவம் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணயக்கைதிகளில் இருந்த ஒரு இஸ்ரேலிய சிப்பாய் வைத்தியசாலையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் போராளிகளால் காசாவிற்கு அழைத்து வரப்பட்ட 19 வயது சிறுமியும் அந்த வைத்தியசாலையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் வெளிப்படுத்தியது.

இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையம் என்று தாங்கள் கூறும் இடத்தில் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்ததாக இஸ்ரேலிய இராணுவமும் கூறுகிறது. எனினும் ஹமாஸ் அதனை மறுத்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி