இலங்கை

கோப் குழு மீது அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் தனியான பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

கோப் குழுவிற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும் அந்த குழுவே ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், நேற்றைய தினம் கிரிக்கெட் அதிகாரிகளை கோப் குழு முன்னிலையில் அழைத்த போது, ​​தேவையான கேள்விகளுக்கு பதிலாக, தேவையற்ற விடயங்களையே கோப் உறுப்பினர்கள் வினவியதாக குறிப்பிட்டார்.

“கோப் குழுவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விற்கப்பட்டதா? என தனக்கு சந்தேகம் நிலவுதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்