ரத்னபுர பகுதியில் வீடொன்றில் தீ விபத்து : ஒருவர் பலி!

ரத்னபுர மல்வல வீதி பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் எரிந்து நாசமானதுடன், அங்கு தங்கியிருந்த ஒருவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என்றும், அவர் பிள்ளைகளை பிரிந்து தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)