ஐரோப்பா

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்! அனுமதி அளித்த காவல்துறையினர்

நாளை வியாழக்கிழமை பரிசில் இடம்பெற உள்ள பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ள இந்த ஆர்ப்பாட்டம், நவம்பர் 2 ஆம் திகதி மாலை Place de la République பகுதியில் இடம்பெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். *முன்னதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin, ‘வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்படமாட்டாது!” என அறிவித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1,077 பேருக்கு குற்றப்பணமும் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்