இங்கிலாந்தின் பலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாபெட் புயலின் தாக்கத்தால் இங்கிலாந்தின் பலப் பகுதிகளில் மழையுடனான வானிலை நீடிக்கும் என மெட் Met office தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த வாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில், அபெர்டீன், அபெர்டீன்ஷைர், அங்கஸ், டண்டீ மற்றும் பெர்த் மற்றும் கின்ரோஸ் ஆகிய பகுதிகளுக்கு மேற்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாபெட் புயல் காரணமாக ஏற்கனவே அதிக நீர் நிலைகள் வெள்ள நிலைமையை கொண்டுவரும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)