ஐரோப்பா செய்தி

ட்ரோன் விவகாரம் ; முட்டிமோதிக்ககொள்ளும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் தங்கள் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தெரிவித்திருந்தது.

கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷ்யா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷ்யா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது.

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு எதிர்காலத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷாய்கு கூறுகையில், ரஷ்ய எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததைப் போல், எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!