வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறைக்குள் தற்கொலை!
யாழ்ப்பாணம் ,புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
46 வயதான பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.




