ஒருகொடவத்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து

ஒருகொடவத்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விரைவாக செயற்பட்டு ஏழு தீயணைப்பு வாகனங்களின் ஊடாக தொழிற்சாலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
தீயினால் உயிர்சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், தொழிற்சாலை மற்றும் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
(Visited 11 times, 1 visits today)