இலங்கை

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி!

உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (11.09) பதிவாகியுள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரண திகேனபுர பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வழமை போன்று சிறுமி தாயுடன் உறங்கச் சென்றதாகவும், சிறுமியின் சிறுநீர் வெளியேறியதை அவதானித்து, சிறுமியின் உடைகளை மாற்றுவதற்கு தாய் தயாராகும் போது, ​​சிறுமியின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதை தாய் அவதானித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து, குழந்தையை ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஹொரண போலீசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!