யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் குறித்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் 15 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)