இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக கனடா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

நேற்று (23.08) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான அனுமதிப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கவுன்டரில் வழங்கிய கனேடிய விசா தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து அவரை குடிவரவு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணையில் சந்தேகநபர் வழங்கிய விசா போலியானது என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​45 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து, தரகர் ஒருவரிடமிருந்து போலி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content